ஜெயராஜ் - பென்னிக்ஸ் அருகில் போலீஸ் நின்றதால்..செவிலியர் அளித்த சாட்சியம்

 
ஜ்

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில்  தந்தை மகனான ஜெயராஜ் பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அன்று போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .  போலீஸ் லாக்கப்பில் கடுமையாக தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.   இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர்,   சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ்  உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

 மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது .  அப்போது வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார்கள்.   வழக்கின் சாட்சியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் செவிலியராக கிருபை திரேனப்பு நீதிபதி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

சய்

 தந்தை-மகன் இருவரும் காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது இருவரின் உடலில் இருந்த காயங்களின் தன்மை குறித்தும் அவர்களின் உடல்நிலை குறித்தும் ரத்த காயங்கள் மற்றும் இரத்த உறைதல் நிலையில் இருந்ததால் அதற்கான ஊசி செலுத்தியது தொடர்பாகவும் சாட்சியமளித்தார்.

ஏன் அப்போது இதைப்பற்றி டாக்டரிடம் எதையுமே  வெளியே தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து படுகாயங்களுடன் வருவார்கள்.   அதுமட்டுமில்லாமல் ஜெயராஜ் பென்னிக்ஸ்  இரண்டு பேரின் அருகே போலீசார் நின்று கொண்டிருந்தார்கள்.   அதனால்  அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.  

 வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பத்மநாபன்,    அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார் அன்றைய தினம் வழக்கின் முக்கிய குற்றவாளியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தந்தை-மகள் இருவருக்கும் ஊசி செலுத்திய செவிலியரிடம் சாட்சி விசாரணை நடைபெற உள்ளது.

இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி மகள் ,  உறவினர் தேசிங்குராஜா,  ஜெயராஜ் நண்பர்கள், உள்ளிட்டோரிடமும் சாட்சியம் விசாரிக்கபட இருக்கிறது.