150 ஆடுகளுடன் வெள்ளத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட தீயணைப்பு படை

 
ll

 மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் அருகே இருக்கும் நாதல் படுகை கிராமத்தில் கணேசனும் அவரது மனைவி காந்திமதியும் ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகின்றனர்.   இவர்கள் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள ஒரு திட்டுப்பகுதியில்  பட்டி அமைத்து  150 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர்.

 கிராமத்திலிருந்து காலையிலேயே அந்த திட்டு பகுதிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்று பட்டியிலிருந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்துவிட்டு, பின்னர் மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு அங்கிருந்து படகு மூலம் கிராமத்திற்கு திரும்பி வந்திருக்கிறார்கள். இதை இந்த தம்பதியினர் வழக்கமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.  

du

 கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டதால் அந்த பகுதியிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அரசு அதிகாரிகள் ஒரு ஆலோசனையின் பேரில் 4 படகுகள் மூலம் அந்தப் பகுதிக்குச் சென்று 150 ஆடுகளையும் தம்பதியினரையும் நான்கு மணிநேரத்தில் மீட்டுள்ளனர்.  மேலும் அதே பகுதியில் சிக்கிக் கொண்டிருந்த 4 புள்ளி மான்களையும் அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

 இந்த மீட்பு சம்பவத்தினால் தீயணைப்பு வீரர்கள்,  அரசு அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி கூறி பாராட்டு தெரிவித்து வருகின்றார்கள்.