பதுங்கியிருந்த பெண் சாமியார் காளிமாதா கைது - விசாரணையின் போது சாமியாட்டம்

 
க

பெண் சாமியார் காளி மாதா கைது செய்யப்பட்டார்.  விசாரணையின் போது அவர் போலீசார் முன்பு சாமி ஆட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  சிபிஐ அதிகாரி என்று ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்த பீலி நாயக்கன்பட்டி கிராமத்தில் தவயோகி என்பவர் ஆசிரமம் நடத்தி வந்துள்ளார்.  கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக இந்த ஆசிரமத்தில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.  அந்த திருட்டை கண்டுபிடிக்க  உதவி செய்வதாக கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த பவிதா வேளாங்கண்ணி என்ற 45 வயது பெண் வந்திருக்கிறார்.  அவர் தன்னை சிபிஐ அதிகாரி எனக்கூறி தவயோகி சாமியாருக்கு அறிமுகமாகியிருக்கிறார்.

ப

 இதன் பின்னர் பெண் சாமியாரான பவிதாவுக்கு சொந்தமாக ஆத்தூர் சித்தரேவு பகுதியில் ஒரு இடம் இருப்பதாகவும் அந்த இடத்தில் முதியோர் இல்லம் நடத்தலாம் என்றும் கூறி தவயோகி இடம் இருந்து 11 லட்சம் ரூபாயை வாங்கி இருக்கிறார்.  வங்கியின் மூலமாக 5.5 லட்சம் அவருக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது.  கொடைக்கானலில் ஒரு இடம் இருப்பதாகவும் அந்த இடத்தில் ஆசிரமம் கட்டலாம் என்றும் சொல்லி பணம் கேட்டதாகவும் தெரிகிறது. 

 அது மட்டும் இல்லாமல் தவயோகி தனது ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில் அங்கு இருக்கும் சுந்தரேசன் உதவியோடு 35 பவுன் நகைகள் சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இந்த நேரத்டில் ஆசிரமத்தில் புலித்தோல் இருப்பதாக  போலீசார் பவிதா புகார் கொடுத்திருக்கிறார்.

 போலீசாரின் விசாரணையில் தவயோகி தலைமறைவாகிவிட்டார் .  ஏற்கனவே தவயோகியிடம் பெற்றிருந்த பவ ஆப் அட்டர்னி உரிமையின் அடிப்படையில் ஆசிரமத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார் பவிதா.

ப்

இது தெரிந்து பவர் ஆப் அட்டார்னி அதிகாரத்தை ரத்து செய்து, போலீசில் புகார் அளித்திருக்கிறார் தவயோகி.  35 பவுன் நகை நிலம் வாங்கித் தருவதாகச் சொல்லி வாங்கப்பட்ட 11 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக புகார் கூறியிருக்கிறார். 

 புகாரின் அடிப்படையில் நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வழக்குகளில் கீழ் பெண் சாமியார் பவிதா என்கிற காளிமாதாவை தேடி வந்தனர்.  இந்த நிலையில் திண்டுக்கல் மேற்கு ஆரோக்கிய மாதா தெருவில் வசித்துவரும் அவருடைய வீட்டில் பதுங்கியிருந்த காளி மாதாவையும்  அவரின் உதவியாளரான இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

 போலீசாரின் விசாரணையில் சிபிஐ  அதிகாரி என்று பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் மேலும் தன்னை காளியின் மறு உருவம் என்றும் விசாரணையின்போது அவர் சாமி ஆடியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.