சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 14 பேர் பலி!
Jul 13, 2020, 09:57 IST1594614464000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் 14 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி -5, ஓமந்தூரார் -3, ஸ்டான்லி – 1, கே. எம். சி -3, தனியார் மருத்துவமனை 2 என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.