செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
கடலூர்
கடலூர் அருகே செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவரது மனைவி தவமணி. இவர்களது மகள் அஸ்மிதா (17). இவர் 12ஆம் வகுப்பு முடித்து விட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அஸ்மிதா தோழிகளுடன் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தும் அவர், தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில், செல்போனில் பேசுவதை கைவிடும் படி நேற்று தாயார் தவமணி கண்டித்து உள்ளார். இதில், மனமுடைந்த அஸ்மிதா, வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளை காணாமல் தேடிய பெற்றோர், அவர் மரத்தில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.