தஞ்சையில் மேலும் 17 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

 

தஞ்சையில் மேலும் 17 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

தஞ்சை

தஞ்சை மாவட்டத்தில் இன்று மேலும் 17 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 185 ஆக உயர்ந்து உள்ளது.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த வாரம் மாணவிகள், அவர்களது பெற்றோர், ஆசிரியைகள் என 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று வரை தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தில் 11 பள்ளிகள், 2 கல்லூரிகள் மற்றும் ஒரு நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 168 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது.

தஞ்சையில் மேலும் 17 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் அமைத்து, மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், கும்பகோணம் தனியார் மகளிர் பள்ளியில் மேலும் 10 மாணவிகளுக்கும், அதே பேகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 5 மாணவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் தஞ்சையில் உள்ள அரசுப் பள்ளியில் மேலும் 2 மாணவிகளுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மாவட்டம் முழுவதும் இன்று 17 மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று உறுதியானதால், தஞ்சையில் மொத்த பாதிப்பு 185ஆக உயர்ந்துள்ளது.