தமிழக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி!

 

தமிழக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது.

தமிழக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி!

இதனிடையே தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்கள், மால்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல கூடாது என்ற தடை நீடிக்கிறது.

தமிழக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி!

இந்நிலையில் தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி அழிக்கப்பட்டுள்ள நிலையில் 15 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்கு மேலான வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளது. உடற்பயிற்சிக் கூடங்கள் நீச்சல் குளம் போன்றவற்றில் பயிற்சி மேற்கொள்ள தடை தொடரும் என்றும்  அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.