“ஸ்டாலின் தான் முதலமைச்சர்” பொன்.ராதாகிருஷ்ணனை கடுப்பேற்றிய பெண்

 

“ஸ்டாலின் தான் முதலமைச்சர்”  பொன்.ராதாகிருஷ்ணனை கடுப்பேற்றிய பெண்

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். கன்னியாகுமரி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியுடன் வலம் வரும் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் வேறு கொண்டார்.

“ஸ்டாலின் தான் முதலமைச்சர்”  பொன்.ராதாகிருஷ்ணனை கடுப்பேற்றிய பெண்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்த பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த பெண் ஒருவர் அவருக்கு வணக்கம் சொல்லி பேச ஆரம்பித்தார். அப்போது அந்தப் பெண் , மீனாட்சி அம்மனிடம் வேண்டி விட்டு தான் வரேன்; ஸ்டாலின் தான் முதலமைச்சர் . ஸ்டாலின் முதலமைச்சராக நாற்காலியில் அமர்வது உறுதி என்று கூறினார். இதைக்கேட்ட பொன் ராதாகிருஷ்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண்ணை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு, அங்கிருந்து நகர்ந்தார் . இந்த சம்பவம் அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது.

“ஸ்டாலின் தான் முதலமைச்சர்”  பொன்.ராதாகிருஷ்ணனை கடுப்பேற்றிய பெண்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக கூறுகிறார்கள். வாக்கு இயந்திரத்தில் கோளாறு அல்ல; அதை கூறுபவர்களுக்கு தான் கோளாறு. காங்கிரஸ் வெற்றி பெற்றால் இயந்திரத்தில் கோளாறு இல்லை என்பார்கள் ; பாஜக என்றால் கோளாறு என்பார்கள் என்று பதிலடி கொடுத்தார்.