தோனியை தொடர்ந்து ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அறிவித்தார். தோனியின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கூடுதல் வருத்தத்தை உண்டாக்கியது. இதையடுத்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
தோனியை தொடர்ந்து ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னாவையும் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. கிரிக்கெட்டை தனது உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா என பிரதமர் மோடி புகழாரம் செய்துள்ளார்.
When we play, we give our blood & sweat for the nation. No better appreciation than being loved by the people of this country and even more by the country’s PM. Thank you @narendramodi ji for your words of appreciation & best wishes. I accept them with gratitude. Jai Hind!🇮🇳 pic.twitter.com/l0DIeQSFh5
— Suresh Raina🇮🇳 (@ImRaina) August 21, 2020
மோடியின் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்வதாக சுரேஷ் ரெய்னாவும் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.