சொத்து தகராறில் தாயை வெட்டிக்கொன்ற மகன் கைது!

 

சொத்து தகராறில் தாயை வெட்டிக்கொன்ற மகன் கைது!

திருச்சி

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே சொத்து தராறில் தாயை வெட்டிக்கொன்ற மகன், மருமகளை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள ஆலம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி சரஸ்வதி (56). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வரும் நிலையில், சரஸ்வதி மகன்கள் இருவருக்கு சொத்துக்களை பிரித்து கொடுத்துவிட்டு தனியே வசித்து வந்தார்.

சொத்து தகராறில் தாயை வெட்டிக்கொன்ற மகன் கைது!

இந்த நிலையில், மூத்த மகன் தர்மராஜ், சரஸ்வதி குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று தனது மனைவி மாரியாயி உடன் மீண்டும் சென்ற தர்மராஜ், சொத்தை எழுதி தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதற்கு சரஸ்வதி மறுத்துவிட்டதால் ஆத்திரமைடந்த தர்மராஜ், தான் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.

இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கல்லக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தர்மராஜ் மற்றும் அவரது மனைவி மாரியாயியை கைது செய்தனர்.