கோபி அருகே கீழ்பவானி கால்வாயில் பெண் சடலம் மீட்பு!

 

கோபி அருகே கீழ்பவானி கால்வாயில் பெண் சடலம் மீட்பு!

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கீழ்பவானி கால்வாய் பகுதியில் அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வேட்டைகாரன்கோவில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சிறுவலூர் போலீசார், விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

கோபி அருகே கீழ்பவானி கால்வாயில் பெண் சடலம் மீட்பு!

அப்போது, உயிரிழந்த பெண்ணிற்கு சுமார் 30 வயது இருக்கும் என்றும், அவர் திருமணமானவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் நாடோடிகள் குழுவை சேர்ந்தரவராக இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிறுவலூர் போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.