திம்பம் மலைப்பாதையில் விதிமீறல் வாகனங்கள் சிறைபிடிப்பு… மலைகிராம மக்கள் எச்சரிக்கை…

 

திம்பம் மலைப்பாதையில் விதிமீறல் வாகனங்கள் சிறைபிடிப்பு… மலைகிராம மக்கள் எச்சரிக்கை…


ஈரோடு

திம்பம் மலைப்பாதையில் விதி மீறிய லாரிகளை சிறைபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க போவதாக மலை கிராம மக்கள் எச்சரிக்கை விடுததனர்.

தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையான திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வழியாக அன்றாடம் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், 6 சக்கரங்கள் மற்றும் 16 டன் எடையளவு கொண்ட லாரிகள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

எனினும், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் பண்ணாரியில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடி, வனத்துறை சோதனை சாவடி மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, கூடுதல் பாரம் ஏற்றிய லாரிகளை அனுமதிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

திம்பம் மலைப்பாதையில் விதிமீறல் வாகனங்கள் சிறைபிடிப்பு… மலைகிராம மக்கள் எச்சரிக்கை…

இதனால் ஆசனூர், தாளவாடி, சாம்ராஜ்நகர் செல்வோர் புலிகள் வாழும் வனப்பகுதியில் தவிப்பதாக குற்றம்சாட்டி உள்ள தாளவாடி மலைக் கிராம மக்கள், மலையில் விளையும் பல டன் காய்கறிகளை உரிய நேரத்திற்குள் அனுப்ப முடியாமல் வீணாவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரிய மலைகிராம மக்கள், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் விதி மீறி அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளை சிறைப்பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.