ஈரோடு அருகே பைனான்சியரிடம் ரூ.99 ஆயிரம் பறிமுதல்!

 

ஈரோடு அருகே பைனான்சியரிடம் ரூ.99 ஆயிரம் பறிமுதல்!

ஈரோடு

ஈரோடு அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 99 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள பெருந்துறை சாலையில் இன்று காலை பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து, அதிகாரிகள் சோதனையிட்டனர்.

ஈரோடு அருகே பைனான்சியரிடம் ரூ.99 ஆயிரம் பறிமுதல்!

அப்போது, வாகனத்தில் திண்டல் மாருதிநகரை சேர்ந்த பைனான்சியர் சதீஷ்குமார் (33) என்பவர், 98 ஆயிரத்து 850 ரூபாய் பணம் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப் பட்டது. இதுகுறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்ததால், பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, பறிமுதலான பணத்தை ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் ஒப்படைத்தனர். மேலும், பணத்திற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்று செல்லுமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.