சத்தியமங்கலம் அருகே கோழி வியாபாரியிடம் ரூ.5.50 லட்சம் பறிமுதல்!

 

சத்தியமங்கலம் அருகே கோழி வியாபாரியிடம் ரூ.5.50 லட்சம் பறிமுதல்!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துவரப்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசனூர் அரேப்பாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தனபிரனேஷ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மைசூர் சாலையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

சத்தியமங்கலம் அருகே கோழி வியாபாரியிடம் ரூ.5.50 லட்சம் பறிமுதல்!

அதில் வாகனத்தில் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துவந்தது தெரியவந்தது. இது குறித்து வாகன ஓட்டியிடம் விசாரித்தபோது, அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டல்லியை சேர்ந்த கோழி வியாபாரி சின்னசாமி என்பதும், மங்களூரில் வியாபாரம் முடித்துவிட்டு பணம் பெற்றுக்கொண்டு பல்லடம் சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது.

ஆனால் எடுத்துவந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அவரிடமிருந்த 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த பணம் சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது..