திருச்சியில் ரூ.73 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது!

 

திருச்சியில் ரூ.73 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது!

திருச்சி

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 73 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திருச்சியில் ரூ.73 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது!

சோதனையின் போது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள், இருவரையும் தனியே அழைத்துசசென்று சோதனை நடத்தினர். அப்போது, உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திவந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து இருவரிடமும் இருந்து சுமார் 1 கிலோ 596 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 73 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் ஆகும். தொடர்ந்து, தங்கத்தை கடத்திய தஞ்சையை சேர்ந்த 2 பயணிகளையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.