சென்னையில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

 

சென்னையில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

சென்னை

சென்னைக்கு வந்த விமானத்தில் இருக்கையில் மறைத்து கடத்திவரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு வளைகுடா நாட்டில் இருந்து வந்த விமானத்தில், ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமான இருக்கையின் அடியில் சோப்பு டப்பாவில் மர்மபொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

சென்னையில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

இது குறித்து, ஊழியர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனையிட்ட போது, தங்கத்தை பசை வடிவில் மாற்றி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து 3 உருளைகளில் இருந்த 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதன் சர்வதேச மதிப்பு சுமார் 35 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பயணி ஒருவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.