காரைக்குடியில் தப்பியோடிய கொரோனா நோயாளி.. பலருக்கு கொரோனா பரவும் அபாயம்!

 

காரைக்குடியில் தப்பியோடிய கொரோனா நோயாளி.. பலருக்கு கொரோனா பரவும் அபாயம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலமாக பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பித்து செல்வது தொடர்கதையாகி வருகிறது.

காரைக்குடியில் தப்பியோடிய கொரோனா நோயாளி.. பலருக்கு கொரோனா பரவும் அபாயம்!

இந்த நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அவரை தேடும் பணி நடந்துள்ளது. இதனையடுத்து காரைக்குடி ராஜீவ் காந்தி சிலை அருகே அந்த நபரை சுகாதாரத்துறையினர் பிடித்து, மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தப்பியோடிய அந்த நபரின் மூலம் பலருக்கு கொரோனா பரவியிருக்கும் அபாயம் நிலவி வருகிறது.