ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி நளினி தற்கொலை முயற்சி!

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி நளினி தற்கொலை முயற்சி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி நளினி தற்கொலை முயற்சி!

இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி நளினி தற்கொலை முயற்சி செய்துள்ளார். சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர் ஒருவர் தலையிட்டதால் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து காவலர்கள், சக கைதிகள் அவரை மீட்டுள்ளனர். தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.