ஊரடங்கை மீறி வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை வந்த 3 பேர் கைது!

 

ஊரடங்கை மீறி வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை வந்த 3 பேர் கைது!

புனித ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா இந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

ஊரடங்கை மீறி வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை வந்த 3 பேர் கைது!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில், மாதாவின் அருளைப்பெற லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு வேளாங்கண்ணியில் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் எளிமையான முறையில் விழா நடைபெறும் எனவும் பேரலாயம் அறிவித்துள்ளது.

ஊரடங்கை மீறி வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை வந்த 3 பேர் கைது!

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வேளாங்கண்ணி திருவிழாவில் கலந்துகொள்ள பாத யாத்திரை வந்த 3 பேரை நாகை மாவட்ட எல்லையில் போலீசார் கைது செய்தனர். பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கூறியுள்ள நிலையில் பக்தர்கள் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.