புதுக்கோட்டை கல்லூரி மாணவி கொலை… நகைக்காக அண்ணனே கொலை செய்த கொடூரம்!

 

புதுக்கோட்டை கல்லூரி மாணவி கொலை… நகைக்காக அண்ணனே கொலை செய்த கொடூரம்!

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை பொன்நகரை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி சிவகாமி. மின்வாரிய ஊழியர். இவரது மகள் லோகப்பிரியா (20). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த லோகப் பிரியாவை, மர்மநபர்கள் படுகொலை செய்து, பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

புதுக்கோட்டை கல்லூரி மாணவி கொலை… நகைக்காக அண்ணனே கொலை செய்த கொடூரம்!

மாலையில் சிவகாமி வீட்டிற்கு திரும்பியபோது, லோகப்பரியா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்த புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, லோகபிரியாவின், பெரியம்மா மகன் சுரேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகை மற்றும் பணத்திற்காக அவர் லோகப் பிரியாவை கைதுசெய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சுரேஷை கைதுசெய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.