தமிழக ஆளுநர் பன்வாரிலால் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!
Aug 21, 2020, 10:01 IST1597984263000
விநாயகர் சதுர்த்தி திருநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
ஆனால் இம்முறை கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடங்களில் சிலைகளை நிறுவவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ” சிறப்பான மற்றும் வளமான எதிர்காலம் அமைந்திட தமிழக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு ,நல்லிணக்கம் ,நல்ல உடல் நலத்தை வாரி வழங்கட்டும்” என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.