கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் : மருத்துவமனை அறிக்கை !

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் : மருத்துவமனை அறிக்கை !

சென்னை ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா உறுதியாகியது. மேலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் ஆளுநர் நலமாக இருப்பதாக கூறப்பட்டது.இதையடுத்து ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவர் அறிவுரைப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் : மருத்துவமனை அறிக்கை !

இதையடுத்து நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் : மருத்துவமனை அறிக்கை !
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிகுறிகள் இன்றி நலமுடன் இருக்கும் ஆளுநரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.