புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா பாதிப்பு இல்லை!

 

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா பாதிப்பு இல்லை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா பாதிப்பு இல்லை!

நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா உறுதியானதால், ஆளுநர் மாளிகை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிரண்பேடிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.