புதுச்சேரியில் 9 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

 

புதுச்சேரியில் 9 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்ததால் செவ்வாய்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

புதுச்சேரியில் 9 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று 368 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8,762 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 328 நபர்களுக்கும், காரைக்காலில் 4 நபர்களுக்கும், ஏனாமில் 36 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 3,321 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5,312 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர், புதுச்சேரியில் 5 நபர்களும், காரைக்காலில் 1 நபரும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.