“ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி”: தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை என தீர்மானம்!

 

“ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி”: தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை என தீர்மானம்!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:-

தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதை சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம்.

“ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி”: தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை என தீர்மானம்!

பிராண வாயுவின் தேவையை கருத்தில் கொண்டு நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும் தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்த வித உற்பத்தியையும் மின் உற்பத்தி அலகையும். எக்காரணம் கொண்டும் திறக்கவோ இயக்கவும் அனுமதிக்கப்படமாட்டாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவை போக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

“ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி”: தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை என தீர்மானம்!

பிராண வாயு உற்பத்தி செய்யும் பகுதியில் பிராணவாயு உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள் .தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும் எக்காரணத்தைக் கொண்டும் பிராணவாயு உற்பத்தி செய்யும் அல்கை தவிர, வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.

“ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி”: தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை என தீர்மானம்!

பிராண வாயு உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். கண்காணிப்புக் குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் ,தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், பிராணவாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள் ,அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் /சுற்றுச்சூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரில் இருந்து மூன்று நபர்கள் கண்காணிப்பு குழுவில் இடம் பெறுவர். தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிராணவாயு தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள பிராணவாயு பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.