“கோமாவில் பிரணாப் முகர்ஜி” : ராணுவ மருத்துவமனை அறிவிப்பு!

 

“கோமாவில் பிரணாப் முகர்ஜி” : ராணுவ மருத்துவமனை அறிவிப்பு!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூளை அறுவை சிகிச்சை டெல்லி ராணுவ மருத்துவமனை செய்யப்பட்டது. அதற்கான பரிசோதனையின் போது பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

“கோமாவில் பிரணாப் முகர்ஜி” : ராணுவ மருத்துவமனை அறிவிப்பு!

அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்று செய்தி வெளியானது.

“கோமாவில் பிரணாப் முகர்ஜி” : ராணுவ மருத்துவமனை அறிவிப்பு!

இந்நிலையில் மூளை அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சுய நினைவின்றி இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது . குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்டு வருகிறது என்று ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.