லாவண்யா மரணத்தில் கனிமொழி மௌனம் ஏன்?

 
kk

பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஒருவரால் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, பள்ளிக்கு எதிராக கொதித்தெழுந்த  கனிமொழி  அவர்களே, தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி புனித ஹிருதய பள்ளியின் மதமாற்ற கொடுமையினால் உயிரிழந்த லாவண்யா மரணம் குறித்து உங்களின் மௌனம் ஏன்? என்று கேட்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

அவர் மேலும்,  ‘’மத அரசியலா? மதவாதமா? ஓ! நீங்கள் பகுத்தறிவுவாதியல்லவா? மறந்து விட்டேன்’’என்கிறார்.

 சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்திலும் கனிமொழி எம்பி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.  ஆனால் மாணவி லாவண்யா விவகாரத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று தான் நாராயணன் திருப்பதி இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

nn

 தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது.   மாணவியின் தற்கொலைக்கு காரணம்  மதம் மாற கட்டாயப்படுத்தியதாக தான் தற்கொலை என்று ஒருபக்கம் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. 

 இதற்கிடையே மாணவி அளித்த இறுதி வாக்குமூலம் வெளியானது.    மருத்துவமனையில்  மரண வாக்குமூலத்தில்,  கடந்த 5 வருடமாக ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறேன்.  - ஹாஸ்டல் வார்டன்  என்னைமட்டும் கணக்கு வழக்குகளை பார்க்கச் சொல்லுவார்.  இதனால் விடுமுறைக்கு கூட என்னை வீட்டிற்கு அனுப்ப மாட்டார். வீட்டில் இருந்து யார் கேட்டாலும் ஒழுங்காக படிப்பார் என்று சொல்லிவிடுவார்.  உடம்பு சரியில்லை என்றால் கூட என்னை விட்டுவிட மாட்டார்.  

 இதனால் விரக்தி அடைந்த நாள் கடந்த 9ஆம் தேதியன்று பூச்சி மருந்து எடுத்துக் குடித்துவிட்டேன்.   உடம்பு சரியில்லை என்று ஊருக்கு சென்றேன்.  வாய், நாக்கு தொண்டை எரிச்சல் அதிகமாக இருந்ததால் மருந்து குடித்த விஷயத்தைச் சொன்னேன்.   ஹாஸ்டல் வார்டன் என்னை தொடர்ந்து கணக்கு வழக்குகளை பார்க்க சொன்னதால் தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று மரண வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார்.