அதிமுகவில் அடுத்த wicket யாருனு தெரியுமா? கொளுத்தி போடும் அஸ்பயர் சுவாமிநாதன்

 
அச்

 சசிகலாவுடன் தொலைபேசியில் பேசி வந்தவர்களையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.  தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த அன்வர்ராஜாவை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கி இருக்கிறார்.   இதன் மூலம் சசிகலாவுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்க முடியாது என்று எச்சரித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 இந்த நிலையில் அன்வர் ராஜாவை தொடர்ந்து அதிமுகவில் மேலும் பலர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறார் அஸ்பயர் சுவாமிநாதன்.

ஒ

சசிகலாவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமியும்,  அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு காட்ட பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமியை அன்வர்ராஜா ஒருமையில் திட்ட அது கட்சிக்குள் பூதாகரமாக வெடிக்க , மா.செக்கள் கூட்டத்தில் சிவி சண்முகம் அன்வர்ராஜாவை   அடிக்க பாய, அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒரே களேபரமாக இருந்தது.

ந்ரெ

 இன்றைக்கு செயற்குழு கூடிய நிலையில் முன்னதாகவே நேற்றிரவு அன்வர்ராஜா கட்சியைவிட்டு நீக்கப்பட்டார்.  இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன்,   பேசியே வளர்ந்த கட்சியாம்..கூட்டங்களில் பேச தடை. டிவியில் பேச தடை .  உள்அரங்குகளில் விவாதிக்க தடை, அடிக்க, உதைக்க பாய்வார்கள். தனக்கு கிடைத்துள்ள “அந்த டெல்லி தகவல்களை” செயற்குழுவில் பேசி, நெருக்கடியை ஏற்படுத்தி விட்டால்? அதற்கு தான் அன்வர் பாய் நீக்கமோ? அடுத்த wicket யாருனு தெரியுமா? என்று கேட்டு கொளுத்தி போட்டிருக்கிறார்.

அஸ்பயர் சுவாமிநாதனின் இந்த கேள்வி  அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.