திமுகவின் சீர்கெட்ட, தரம் தாழ்ந்த அரசியலை அம்பலப்படுத்துவோம் - நாராயணன் திருப்பதி

 
ட்ட்
பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கும்  முதல்வருக்கு, திமுகவின் சீர்கெட்ட, தரம் தாழ்ந்த அரசியலை அம்பலப்படுத்துவோம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் நாராயணன் திருப்பதி.

முதல்வர் மு. க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,   நல்லிணக்கமாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்காய அவசரம் காட்டும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்த வேண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 மேலும்,   மக்கள் நலனுக்கு எதிரான இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைப்பதை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்.   மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழக மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

ன்

அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது பாஜக.

 இந்த நிலையில் முதல்வர் கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் இவ்வாறு கடிதம் எழுதியிருக்கிறார்.  

பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கும்  முதல்வரின் கடிதம் குறித்து தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,    தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஹிந்து மதத்தின் மீதான வெறுப்பை திணித்து, ஓட்டுக்காக  சிறுபான்மை மதத்தினருக்கு பரிந்து பேசி, போலி மதசார்பின்மை பேசி, மதங்களுக்கிடையே, மனிதர்களுக்கிடையே பிளவை உருவாக்கி, அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முனைப்பு காட்டும் திமுகவின் சீர்கெட்ட, தரம் தாழ்ந்த அரசியலை அம்பலப்படுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார்.