இதனால்தான் கூட்டணி தலைவர்களிடம் ஸ்டாலின் அதிகம் பேசுவதில்லை!

 
ks

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் யாரிடத்திலும் அதிகம் பேச மாட்டார்.  கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் இடத்தில் கூட அதிகம் பேச மாட்டார் என்று பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ். அழகிரி.   திமுகவின் செய்தி தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டிகேஎஸ் இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் விழாவில் தான் அவர் இவ்வாறு பேசினார்.

tks

இத் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னர் பேசியபோது,  கே.எஸ்.அழகிரியின்  பேச்சை குறிப்பிட்டுப் பேசினார்.  என்னை பொறுத்தவரைக்கும் பேச்சை குறைத்து நம்முடைய செயலில் திறமையை காட்ட வேண்டும்.   அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் .  அதற்கு நீங்கள் எல்லாம் எந்த அளவிற்கு சிறப்பாக ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகத் தெரியும் என்றார்.

 அவர் மேலும்,   இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களை ஒப்பிட்டு சொல்லுகின்ற போது அந்தந்த மாநிலத்தில் இருக்கும் முதலமைச்சர்களுக்கு எல்லாம் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது.   அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மு. க. ஸ்டாலின் முதலிடம் என்ற செய்தி.   அதில் எனக்கும் பெருமைதான்.  அதை நான் மறுக்கவில்லை .  ஆனால் முதலமைச்சர் நம்பர் ஒன் என்று சொல்வதைவிட தமிழ்நாட்டிற்கு நம்பர் ஒன் இடம் என்று சொல்லும் நிலை வர வேண்டும்.   அந்த எண்ணத்தோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.