கெட்டவனுக்கு கெட்டவன் -சலசலப்பை ஏற்படுத்திய ச.ம.உ.

 
ச்க்

 நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் நீ ரவுடி என்றால் நானும் ரவுடிதான் என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் திமுக எம்எல்ஏ காந்திராஜன்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏ எஸ். காந்திராஜன்.  இவர் வேடசந்தூர் அடுத்த வடமதுரையில் தமிழக அரசின் சார்பாக வரும் முன் காப்போம், இலவச மருத்துவ முகாம், ஆதரவற்ற பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

க்

அரசு வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  நலத்திட்டங்கள் வழங்கிய பின்னர் மைக்கை பிடித்து பேசிய காந்திராஜன், என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.  அதை கண்டு நான் அஞ்ச மாட்டேன்.  நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்று சொன்னார்.   அவர் மேலும்,   நீ ரவுடி என்றால் நானும் ரவுடிதான் என்று ஆவேசமாக பேசியதைக் கண்டு கூட்டத்தினரிடையே பெரும் சலசலப்பு  ஏற்பட்டது.

 திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் அதிமுக செயலாளராகவும் ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்த காந்திராஜன்,  கடந்த 2006ஆம் ஆண்டில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.   திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.    91 ல் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்,  நான்காவது முறையாக வேடசந்தூர் தொகுதியில் களம் இறங்கி இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறார்.