அந்த பள்ளி மூடப்பட வேண்டும் - எச்.ராஜா ஆவேசம்

 
h

தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள மைக்கேல்பட்டியிலுள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி லாவண்யாவை மதமாற்ற நிர்பந்தித்து அதற்கு மறுத்ததால் கழிவறையை கழுவ நிர்பந்தித்த காரணத்தால் விஷமருந்தி மரணித்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு பள்ளி மூடப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி இருக்கிறார்.

 அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் லாவண்யா.  17 வயதான இந்த லாவண்யா தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அடுத்த மைக்கேல் பட்டியில் இயங்கிவரும் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்திருக்கிறார். 

tnj

 அங்குள்ள பள்ளியின் விடுதியில் தங்கி அவர் படித்து வந்திருக்கிறார்.   திடீரென்று மாணவி லாவண்யா விசம் குடித்துவிட்டதாகவும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் , மாணவியின் தந்தை முருகானந்தத்திற்கு  தகவல் வர,  அவர் விரைந்து சென்று மகளின் நிலைமையை அறிந்த பின்னர்,  திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

 இதை அடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யாவிடம் திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் விடுதியில் தன்னை வேலை செய்யுமாறு வார்டன் சொன்னதால்தான் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்துவிட்டதாக மாணவி சொல்லியிருக்கிறார்.  


 இதையடுத்து போலீசார் பள்ளி வார்டன் சகாயமேரி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி லாவண்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதமாற்ற நிர்பந்தித்து அதற்கு மறுத்ததால் கழிவறையை கழுவ நிர்பந்தித்த காரணத்தால் விஷமருந்தி மரணித்துள்ளார் என்ற உண்மை தெரியவந்திருப்பதால் காரணமானவர்களை கைது செய்! கைது செய்! என்று லாவண்யாவின் உறவினர்களும் ஊராரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இதற்கு காரணமானவர்களை  கைது செய்ய எச்.ராஜாவும் வலியுறுத்தி இருக்கிறார்.