எத்தனை நன்றி கூறினாலும் போதாதா?எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் போதாதா? -முதல்வருக்கு பாஜக கேள்வி
ஓய்வு உறக்கமின்றி பணியாற்றி வரும் அனைத்து துறை அதிகாரிகளுக்கு எத்தனை நன்றி கூறினாலும் போதாது என்று தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். மழை வெள்ள பாதிப்புகளில் நடவடிக்கை எடுத்துவருவதால்தான் இப்படி சொல்லி இருக்கிறார் முதல்வர்.
ஆனால், தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஓய்வு உறக்கமின்றி மக்களை சோக வெள்ளத்தில் சிக்கவைத்த நகராட்சி மாநகராட்சி ஊழல் அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் போதாது என்கிறார்.
அவர் மேலும், சென்னை நகரம் நரகம் ஆகியது. தெருக்களில் நீர் தேங்கி கடும் பாதிப்பு. மழை நீர் வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து மற்றும் பராமரிக்காதது காரணம். ஆனால் அமைத்ததாக பராமரிக்க பட்டதாக அதிகாரப்பூர்வமாக சொல்கிறார்கள்.
திமுக அரசு கடந்த அரசை குறை சொல்கிறது. அப்போது இருந்த அதே அதிகாரிகள் தான் இப்போதும் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயங்குவது ஏன்? ஊழல் நடந்து இருந்தால் அதை வெளிக்கொண்டு வர மனமில்லாத இருப்பது ஏன்? இந்த சீர்கேட்டிற்கு காரணமான அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு செயலிழந்து உள்ளதா திமுக அரசு என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார் நாராயணன் திருப்பதி.