எஸ்.பி.வேலுமணிக்கு 2 நாள் கெடு விதித்த செந்தில் பாலாஜி

 
s

 உண்மை என்றால் இரண்டு நாட்களில் அதற்கான ஆதாரத்தை  வெளியிடட்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு இரண்டு நாட்கள்கெடு  விதித்திருக்கிறார்  அமைச்சர் செந்தில் பாலாஜி 

கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லும் எஸ்.பி.வேலுமணி,  மேலும் அதற்கான ஆதாரங்களை இரண்டு நாட்களில் வெளியிடுவாரா?  தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

 கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது . சிறப்பு விருந்தினராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.   அப்போது கோவை வளர்ச்சித் திட்டங்கள் குறித்த 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டிருக்கின்றன இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கரங்களில் ஒப்படைக்கப் படும் அவர் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவார் என்று தெரிவித்தார்.

sp

 அப்போது 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு அவை நிறுத்தப்பட்டு விட்டதாக எஸ். பி. வேலுமணி குற்றம்சாட்டி இருக்கிறாரே என்ற கேள்விக்கு,   அவை எந்தெந்த சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது .  எந்தெந்த சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது.  அதன் வேலை வேலை தொடக்கம் ஆகியவற்றின் பட்டியலை தெளிவாக வெளியிடட்டும் என்று தெரிவித்துள்ள செந்தில்பாலாஜி,    நிர்வாக அனுமதி பெறாமல் டெண்டர் விடாமல் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலை பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

 நிதி ஆதாரங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும்.  கோவை மாநகராட்சியின் நிதிநிலை மோசமாக இருக்கிறது.  சாலை பணிகள் குறித்த வேலுமணியின் குற்றச்சாட்டை ஆராய்ந்து பார்த்தோம்.  அது போன்ற ஒன்றுமே இல்லை.  அவர் தொடங்கியதாக சொல்லும் பணி தேர்தலுக்காக தொடங்கப்பட்ட பணிதான்.  300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போட்டு பணி தொடங்கினோம் என்று சொல்லுகிறவர் அந்த முன்னூறு சாலைகள் எவை எவை என்று பட்டியல் வெளியிட்டிருக்கிறாலாமே என்று கேட்கிறார்.