பாஜகவில் சேராததால் என்னை திகாருக்கு அனுப்பினாங்க - காங்., சிவக்குமார் குற்றச்சாட்டு
கர்நாடக மாநிலத்தில் தொடர்ச்சியாக பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அண்மையில் கர்நாடக மாநில அரசு அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த ரெய்டில் பணம் , தங்க ம், முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஒரே நேரத்தில் 15 அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பாஜக மீது கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவகுமார் திகார் சிறைக்கு சென்றது ஏன் என்பது குறித்து பாஜக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிவக்குமார், பாஜகவுக்கு ஆதரவளிக்கவில்லை . அவர்களுடன் செல்லவில்லை என்பதால் என்னை திகார் சிறைக்கு அனுப்பினர் . நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்த ஆட்சியாக கர்நாடகா பாஜக ஆட்சி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.
பாஜகவில் சேர்ந்திருந்தால் சிறைக்கு சென்றிருக்க மாட்டீர்களா? என்ற கேள்விக்குக், எல்லாருக்கும் தெரிந்ததுதான். என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்திருக்கிறார் சிவக்குமார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிவக்குமார், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.