ரெய்டில் சிக்கிய ரூ.11.45 கோடி - கதிர் ஆனந்திடம் வரி வசூலிக்க இடைக்கால தடை

 
ka

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் இடம் மக்களவைத் தேர்தலின்போது 11.45 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வரி வசூலிக்க இடைக்கால தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

 கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் தொடர் ரெய்டு நடந்தது.

d

 கதிர் ஆனந்துக்கு நெருக்கமான தாமோதரன் மற்றும் விமலா ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வந்தனர்.   இந்த ரெய்டில் விமலா வீட்டிலிருந்து 11 கோடியே 48 லட்சம் ரூபாய் அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.  அந்த பணம் தன்னுடையது என்று விமலாவின் சகோதரர் சீனிவாசன் உரிமை கோரி இருந்தார்.    ஆனாலும் அந்தப் பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என்று ஏன் அறிவிக்கக் கூடாது என விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

 இந்த நோட்டீசில் கதிர் ஆனந்த் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தினை நிராகரித்துவிட்டு அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என அறிவித்ததுடன் அதற்கான வரியையும் செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது.

 இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்  கதிர் ஆனந்த்.  பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் உரிமையாளருக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதை விளக்க முடித்த பின்னரும் வருமான வரித்துறை தனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

 கதிர் ஆனந்த் தரப்பின் இந்த வாதத்தை கேட்ட நீதிபதி வரிவசூலிக்கும் வருமானவரித்துறை நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கு குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டது உள்ளார் நீதிபதி.   மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.