ஓபிஎஸ் மீதும் அவர் மகன் மீதும் வழக்கு தொடர உத்தரவு

 
oo

முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  

 கடந்த 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார்.   தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வென்ற நிலையில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது அனைவரின் கவனத்தையும் திருப்பியது.  

oo

 அதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.  இவ்விருவரும்  தேர்தல் சமயத்தில் சொத்து உள்ளிட்டவை குறித்து உண்மையான தகவல்களை மறைத்து தவறான தகவல்களை குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றும் இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றும் தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

 இதுகுறித்து பன்னீர் செல்வம் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் இந்த வழக்கை தேனி மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றவும் உத்தரவிட்டிருக்கும் நீதிபதி வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார்.  

 மேலும் இந்த வழக்கை தொடுத்திருக்கும் மிலானிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.