சதிவலையை அறுத்தெறிவோம் -ஜெ., சமாதியில் ஓபிஎஸ் முழக்கம்

 
ao

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று.   இதை முன்னிட்டு அமைச்சர்களும் தொண்டர்களும் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதிமுகவினர் ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை செய்தார்கள்.

b

மலர்தூவி நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செலுத்திய பின்னர் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.    தீயசக்தி தீண்டாமல், தமிழ்நாடு தலைநிமிர உறுதி ஏற்கிறோம்.  அம்மா தந்த அழகான தமிழ் நாடு, வளமான தமிழ்நாடு,  கொலையில்லை கொள்ளை இல்லை ,

dd

மக்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.  அதை மீண்டும் அமைப்பதற்கு,  ஓய்வின்றி உழைப்பதற்கு  உறுதியேற்கிறோம்.  நம் கழகத்தை அழித்திடலாம் என, பகல்கனவு காண்போரின் சதிவலையை அறுத்தெறிவோம் என உறுதி ஏற்கிறோம்! என்று முன் மொழிய,  அனைவரும் வழிமொழிந்தனர்.