பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.50க்கு மதுபானம் கிடைக்கும் - மாநில தலைவர் பேச்சால் சலசலப்பு
பாஜக ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு மதுபானம் கிடைக்கும் என்ற மாநில தலைவரின் பேச்சு ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அம்மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது, ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவுடன் தரமற்ற மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. வரும் 2024ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்தால் 70 ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்படும். இதில் வருவாய் அதிகரித்தால் 50 ரூபாய்க்கு மதுபானம் விற்கப்படும் என்று பேசியிருக்கிறார் .
மாநில தலைவரின் இந்த பேச்சு ஆந்திர மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை என்று பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.