கோயபல்ஸ் ஒன்பது கொள்கைகள் யாருக்கு பொருந்தும்..?

 
அ

 கோயபல்ஸ் ஒன்பது கொள்கைகள் யாருக்கு பொருந்தும் என்பதை மக்கள் அறிவார்கள் எனச் சொல்லியிருக்கிறார் தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

 ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர் கோயபல்ஸ்.  ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைக்கும் வரை அதைப்பற்றி திரும்பத் திரும்ப உரக்கப் பேச வேண்டும் என்பது தான் கோயபல்சு தத்துவம் ஆகும்.  இந்த நிலையில் சன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பீட்டர் அல்போன்ஸ் பாசிசத்தையும் மக்கள் மத்தியில் செயல்படுத்துவது குறித்த கோயபல்ஸ் ஒன்பது கொள்கைகளையும் பட்டியலிட்டார்.

அல்

 பின்னர் அவர் அந்த கோயபல்ஸ் கொள்கைகள் யாருக்கு பொருந்தும் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் சொல்லி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

 பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள் அது மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை , நாட்டில் என்ன நடந்தாலும் எதிர்க்கட்சிகளை  குற்றம் சொல்லுங்கள், எவ்வளவு பெரிய தவற்றையும் தேசத்தின் பாதுகாப்பு என்கிற பெயரில் நியாயப்படுத்த வேண்டும் , ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் , எல்லாவித உண்மைகளுக்கும் ஒரு பொய் கதையை புனைந்து அதை சமூகத்தில் உலாவ விட வேண்டும் , தங்கள் கருத்துக்கு எதிராக இருப்பவர்களை எல்லாம் தேசத் துரோகிகள் என்று சொல்லவேண்டும் , தங்கள் இயக்கத்தில் உள்ள தலைவர்களை பொதுமக்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் ,  கடந்த காலப் பெருமைகளை பேசிக்கொண்டே இருங்கள்,  அடிக்கடி பேரணி நடத்துங்கள் அடிக்கடி பெருந்திரள் கூட்டத்தை நடத்துங்கள் என கோயபல்ஸ் ஒன்பது கொள்கைகளை பட்டியலிட்டார்.