ஐந்து மாநில தேர்தல் - தடைகள் நீட்டிப்பா?

 
எ

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் , கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதற்காக கட்சிகள் பரபரப்பில் இருக்கின்றனர்.

 இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.  இதையடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஐந்து மாநில சுகாதார செயலாளர்கள்,  மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று காணொளியில் ஆலோசனை நடத்துகிறது .

ப்

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ,கோவா, மணிப்பூர் ,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.   இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் இன்றைக்கு ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதா? அல்லது தடையை மேலும் நீட்டிப்பதா? என்பது குறித்து என்று ஆலோசனை நடைபெற இருக்கிறது.