திமுக - நாம் தமிழர் போஸ்டர் யுத்தம்

 
ட்ம்

ஒரு பக்கம் டுவிட்டர் யுத்தம் நடத்தி வரும் திமுகவினரும்  நாம் தமிழர் கட்சியினரும்  இன்னொரு பக்கம் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.  இதற்கு அடுத்த கட்டமாக நேருக்கு நேர் என்று நாம் தமிழர் கட்சியினர் மேடையேறி  அத்தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் திமுகவினர்.

#கதறும்_திமுக  என்று டுவிட்டரில் திமுகவுக்கு எதிராக இயங்கி வந்த நாம் தமிழர் கட்சியினர்,  தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மேடையில் ஏறிய திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்டவர்கள்,  மேடையிலிருந்த மைக்கை பிடுங்கி தூர வீசி நாற்காலியை தூக்கி நாம் தமிழர் கட்சியினர் மீது அடித்திருக்கிறார்கள்.  இதனால் #ரவுடிதிமுக  என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள் நாம் தமிழர்.


சீமானை கடுமையாக தாக்கி பேசி வருவதால் #திமுக_ஆபாசகுண்டர்கள் என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்து வருகின்றனர் நாம் தமிழர்.

இந்நிலையில்,   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொண்டி பேரூர் திமுகவினர் சீமானுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.  அந்த போஸ்டருக்கு பக்கத்திலேயே சீமானைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.  இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 தன்னை சங்கி சங்கி என்று சொல்லி திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருவதாக குற்றம் சாட்டிய சீமான்,  கண்ட நாயெல்லாம் என்ன சங்கி என்று சொல்கிறது என்று சொல்லி தன் காலில் கிடந்த செருப்பை கழற்றி தூக்கி காட்டி எச்சரித்தார் சீமான்.  இது திமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

ட்ம்

இதனால் தான்,  ஈழத் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் எச்சக்கல சீமான் வெறி நாயே.. திமுக தொண்டர்கள் மனது புண்படும்படி மேடையில் செருப்பை காட்டிய அரசியல் நாகரீகம் தெரியாத சீமான் நாயே.. உனது போக்கினை இத்துடன் நிறுத்து இல்லையேல் நிறுத்தப்படுவாய்.  திருந்து.. இல்லையேல் திருத்தப் படுவாய்.  அடங்கு இல்லையேல் அடக்கப்படுவாய்  என்று திமுகவினர் போஸ்டர் ஒட்ட,

ட்ம்

பதிலுக்கு,  திமுகவுக்கு எச்சரிக்கை அன்னை தமிழினத்தை அழித்தொழித்த கயவர் கூட்டம் சீமானை பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல தேசிய தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் என்று நாம் தமிழர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.