சசிகலா 2 கோடி ரூபாய் கொடுத்தாரா? ரூபாவிடம் 20 கோடி ரூபாய் கேட்பது ஏன்?

 
s

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து விடுதலையாகி இருக்கிறார் சசிகலா .   அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த போது,   அவருக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.   இந்த சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் போலீஸ் டிஜிபியாக இருந்த சத்தியநாராயண ராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கடந்த 2007ஆம் ஆண்டில் ஜூலை 12ஆம் தேதி அன்று ஐபிஎஸ் அதிகாரி ரூபா அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0p

 இதையடுத்து சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த சத்தியநாராயணராவ் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 21ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.   அந்த நேரத்தில் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தன் மீது தவறான குற்றச்சாட்டு சொல்லி தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது 20 கோடி ரூபாய் மானநஷ்ட கோரி கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று சத்தியநாராயணராவ் வழக்கு தொடர்ந்தார்.

 பெங்களூர் 9வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ரூபாவுக்கு எதிராக  இந்த மான நஷ்ட வழக்கு அவர் தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.    இதற்கிடையில் தன் மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கு ரத்து செய்யக்கோரி ஐபிஎஸ் அதிகாரி ரூபா கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இவ்வழக்கு தொடர்பான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.   வழக்கு விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   இந்த மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருப்பதே சட்டத்திற்கு விரோதமானது.   செசன்சு கோர்ட்டில் தான் மானநஷ்ட வழக்கு தொடர வேண்டும் .   ஆனால் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ag

 ஒருவரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக மானநஷ்ட வழக்கு சம்பவம் நடந்த 6 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.   ஆனால் ஆறு மாதத்திற்குப் பின்புதான் வழக்குத் தொடரப்பட்டு இருக்கிறது. அந்த விதிமுறைகளை மனுதாரர் பின்பற்றவில்லை. ஒரு அரசு அதிகாரி மற்றொரு அதிகாரி மீது அரசிடம் அறிக்கையை புகார் தெரிவிக்க வேண்டும் . அதுவும் இங்கே பின்பற்றப்படவில்லை.

எல்லாம் பரிசீலிக்காமல் மனுதாரர் தொடர்ந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு சட்டத்திற்கு எதிரானது என்று வாதிட்டார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.   இரு  தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சத்தியநாராயணராவ் 20 கோடி கேட்டு தொடர்ந்த மானநஷ்ட வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.   அதேநேரம் முன்னாள் டிஜிபி சத்யநாராயணராவ் உரிய விளக்கம் அளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.