கசாப்பு கடைக்காரன்.. அண்ணாமலை மீது சிபிஎம் கடும் தாக்கு

 
kb

கசாப்புக் கடைக்காரன் ஜீவகாருண்யம் பேசுவது போல இருக்கிறது பாஜக  கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது என்று கமெண்ட் அடித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.

 பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைத் தளங்களில் இயங்கி வந்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் கொதித்தெழுந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை.  அரசியல் பேசினால் உடனே கைது நடவடிக்கை பாய்கிறது .  இது சர்வாதிகாரம் . இனியும் பாஜகவினர் மீது கைவைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று வெடித்தார்.

an

 இதுகுறித்து பெரியார் திடலில் இன்று பெரியாரின் 48வது தினத்தை நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,   கருத்து சுதந்திரத்தை பற்றி பேச தகுதி இல்லாத கட்சி பாஜக  என்று எடுத்த எடுப்பிலேயே போட்டு தாக்கினார்.

தொடர்ந்து அவர்,  நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேச முடியாத நிலை இருக்கிறது.  தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல்   சட்டம் இயற்றிய வருகிறது , கருத்துக்களை கேட்காமல் சட்டங்களை திருத்தி வருகிறது பாஜக.   அப்படிப்பட்ட பாஜக கருத்து சுதந்திரம் குறித்து பேசுவது கசாப்புக் கடைக்காரன்  ஜீவகாருண்யம் பேசுவது போல இருக்கிறது என்று கமெண்ட் அடித்தார்.