கூட்டணிக்குள் வெடித்த சர்ச்சை - வருத்தம் கேட்காமல் பொறுத்தருளச்சொன்ன அமைச்சர்
கூட்டணி கட்சி எம்பியை ஒருமையில் பேசியதற்காக எழுந்த கட்டணத்தை அடுத்து, வருத்தம் தெரிவிக்காமல், பொறுத்தருள்க என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர் கே. என். நேரு .
தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு. இவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சூடான நேரு, சம்பந்தப்பட்டவர்களை விட்டுவிட்டு என்னிடம் என் கேள்வி கேட்கிறீர்கள். வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான். அந்த ஆளு கிட்ட கேளுங்க.. என்கிட்ட ஏன் கேக்குறீங்க? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை எம்.பி. வெங்கடேசனை ஒருமையில் பேசினார்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. கூட்டணி கட்சி எம்.பி. பற்றி திமுக அமைச்சர் ஒருமையில் பேசியது வீடியோ ஆகி அது வைரல் ஆகி வந்தது. நேருவின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்பாக ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே. என். நேரு, வெங்கடேசன் எம்.பியை ஒருமையில் பேசி இருப்பது அரசியல் நாகரிகமற்றது. பொது வாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசவேண்டும் . அதைத்தான் மக்கள் விரும்புவார்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கடுமை காட்டியிருந்தார்.
இந்த நிலையில் எம்பி வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்காமல், பொறுத்தருள்க என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் கே. என். நேரு. அவர், ‘’பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் பாலகிருஷ்ணனுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் நேரு.