அதிமுக உட்கட்சி தேர்தல் மோதல்-சரமாரியாக தாக்கிக்கொண்ட தொண்டர்கள்

 
rஅ

அதிமுக உட்கட்சி தேர்தலில் கடும் மோதல் நடந்து முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுக தொண்டர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 அதிமுகவில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி அதிமுக நிர்வாகிகளுக்கான விருப்பமனு தேர்தல் கடந்த 11ஆம் தேதி அன்று திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.   இத்தேர்தலில் திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் பதவிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கொட்டாமேடு கோபாலகிருஷ்ணன் விருப்ப மனு தாக்கல் செய்ய வந்திருக்கிறார். 

அட்

 அப்போது தற்போதைய திருவாலங்காடு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேலும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் நடைபெற்ற இடத்திலேயே விருப்ப மனு தாக்கல் செய்ய விடாமல் செய்திருக்கிறார்கள்.   முன்னாள் அமைச்சர் ரமணா,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.ஹரி ஆகியோர் முன்னிலையில் நாற்காலிகளைக் கொண்டும் கைகளாலும் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள்.

 இதை அடுத்து கொட்டாமேடு கோபாலகிருஷ்ணன் தலையில் கட்டு போட்டவாறு வந்து மீண்டும் திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்.  

 அதிமுக உட்கட்சித் தேர்தலில் நடந்த இந்த கடும் மோதல் சம்பவம் குறித்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதை வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.  அந்த வீடியோ வைரலாகி வருகிறது.