உதயசூரியன் சின்னத்தை ‘கொலுசு சின்னம்’என மாற்றிக்கொள்ளலாம் - பாஜக தாக்கு

 
cpr

 திமுக என்கிற கட்சி பெயரை கொலுசு பார்ட்டி என்று மாற்றிக் கொள்ளலாம் என்றும்,  உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னம் என்று மாற்றிக் கொள்ளலாம் என்றும் திமுகவை கடுமையாக விளாசித் தள்ளி இருக்கிறார் முன்னாள் எம். பி. சி. பி. ராதாகிருஷ்ணன்.

 தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.   கோவை மாவட்டத்தில் காந்தி பார்க் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்பி சிபி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பாஜக தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

cp

 ஆர்ப்பாட்டத்தின் பின்னர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது,   ’’சொல்வதை செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு சொல்லாததை எல்லாம் செய்பவர்கள்தான் திமுகவினர்’’ என்றார்.   

 தொடர்ந்து அவரது குறித்து,    சொத்தை விற்று கட்டுவதுபோல் சொத்து வரியை உயர்த்தி விட்டார்கள்.  அதிமுகவினர் மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை பெரும்பொழுது அடிமை அரசு என்று சொன்ன இவர்கள் தற்போது அனைத்துக்கும் டெல்லியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.   கையாலாகாத அரசு ஆட்சிப் பொறுப்பில் இருப்பதாகவும் கடுமையாக தெரிவித்தார்.

pc

 காமராஜருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருப்பதாக சொன்னவர்கள்தான் திமுகவினர்.   திமுக பெற்றுள்ள  கடைசி வெற்றி இந்த வெற்றிதான் அதனால் இனி திமுக கட்சியின் பெயரை கொலுசு பார்ட்டி என்றும்,  உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னமாகவும் மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்றார்.

 சொத்து வரியை உயர்த்தியதற்கு  மத்திய அரசுதான்  காரணம் என்று சொன்னால் அதற்கான ஆவணங்களை காட்ட வேண்டும் .  தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாமலேயே பெட்ரோல்,  டீசல் விலையை குறைத்தது தான் மத்திய அரசு.   ஆனால் திமுக அரசு சொன்னதை சரிவர செய்யவில்லை என்று திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.