மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்தது போல் உள்ளது... இபிஎஸ் -ஒபிஎஸ்சை கலாய்த்த துரைமுருகன்

 
ட்ச்

மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்தது போல் உள்ளது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,  அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் கலாய்த்தார் துரைமுருகன்.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் தெற்கு மாவட்ட திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்றத.   இந்த நிகழ்வில் 56 வேட்பாளர்களையும் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிமுகம் செய்து வைத்தார்.

எஒ

 அப்போது பேசிய போது ,  அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.    கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அதிமுகவினர் என்ன செய்தனர் என்பது தெரியவில்லை.  கலைஞர் காலத்தில் 40 அணைகளை கட்டினார்.   ஒரே ஒரு அணையையாவது இந்தப் பத்து ஆண்டுகள் ஆட்சி காலத்தில் அதிமுகவினர் கட்டி இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பினார்.

 அடுத்து பேசிய அவர்,    நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தோம்.    ஆளுநர் இதில் தவறு உள்ளது என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்.    ஆளுநரின் வேலை மாநில அரசிடமிருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்றுவது தான்.   அதுமட்டுமல்லாது கிராமப்புற மக்கள் நீட் வேண்டாம் என்று கூறுவதாக ஆளுநர்  தெரிவித்திருக்கிறார்.  

 ஆளுநரின் நிலைப்பாடு இப்படி இருக்கும்போது நீட்  விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்தது போல் இருக்கிறது.  இவர்கள்  நீட்டை ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்று சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தார்  துரைமுருகன்.