ஈஸ்வரன் தொடங்கிய விவாதத்தை முடித்து வைத்து துரைமுருகன்

 
d

கண்ணகி சிலை விவகாரத்தில் திமுக அதிமுக உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். 

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியபோது,  அதிமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை காரணமில்லாமல் அகற்றியது விட்டார்கள் என்று தெரிவித்தார். 

 உடனே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.  அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பேசியபோது,   ’கண்ணகி சிலையை உடைத்து தள்ளிய அதிமுக’ என்று உறுப்பினர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

es

 இதற்கு பதிலளித்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ’’சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் எந்த ஒரு தனிப்பட்ட இயக்கத்தினையோ தனிப்பட்ட நபர் குறித்து பேசாமல் பொதுவான கருத்தை முன்வைத்தார்.   அதனால் அவை குறிப்பில் இருந்து அதை நீக்க வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.  ஆனாலும், அதிமுக ஆட்சியில் சிலை அகற்றப்பட்டதா  இல்லையா என்ற கேள்வியை எழுப்பினார்.

 இதற்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.  அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ’’கண்ணகி சிலை மாற்றப்பட்ட நேரத்தில் லாரி இடித்து விழுந்து விட்டதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியது.  ஆனாலும் அது அகற்றப்பட்டது உண்மை’’ என்று சொல்லி விவாதத்தை முடித்து வைத்தார்.