இவர்களை நிராகரிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை - சசிகலா

 
ss

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது .  நேற்றையதினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள். 

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் திமுகவினருக்கு மகிழ்ச்சியளிக்கும்.  தவிர சாமானிய மக்களுக்கு எந்த பலனும் சென்று சேர போவதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து அது குறித்து,   திமுக ஆட்சியில் இது போன்ற அலங்கார அறிக்கைகளைப் பார்த்து தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.   தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப் பார்க்கும்போது சாமானிய மக்களின் நலனுக்காக பட்ஜெட்டாக தெரியவில்லை.   கார்ப்பரேட்டுகளுக்கு உதவிடும் பட்ஜெட்டாக தான் தெரிகிறது என்கிறார்.

sa

 ஐந்து முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டுதான் ஒரு அரசு நிதி ஒதுக்கீடு செய்வதை வரையறுக்க வேண்டும்.  ஆனால் திமுக அரசிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்த சசிகலா,   தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுவதாக இந்த பட்ஜெட் மூலம் தெரியவருகிறது.  எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும் தங்கள் சேமிப்புகளை எல்லாம் காப்பாற்ற முடியாமல் தவிக்கின்ற தாய்மார்களுக்கு அவர்களின் பெண் பிள்ளைகளின் திருமண கனவு இந்தத் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் தகர்ந்து விட்டது  என்கிறார்.

தங்கத்தாலான தாலி அணிவது தமிழ் பெண்களின் சுய மரியாதை.   தமிழ் பாரம்பரியத்தின் வெளிப்பாடாக இருந்து வருகிறது.   இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திமுக அரசு இனிமேல் தமிழ்ப் பாரம்பரியத்தின் காவலன் என்று மார்தட்டிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

 இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய்,  மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம், நகை கடன் தள்ளுபடி என்றால் தேர்தல் அறிக்கையில் சொல்லி எப்படி மக்களை ஏமாற்றி வருவது போலவே இப்போது புதிய பரிமாணத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மீண்டும் மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகப் போகிறார்கள்.  அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என சொல்லிவிட்டு தற்போது முற்றிலும் மறந்திருப்பது   வேதனை அளிக்கிறது. 

 தமிழகத்தில் உள்ள நிதி பற்றாக்குறை அளவு கொரோனா சார்ந்த காரணங்கள் இருந்தாலும் பல்வேறு உலக நிகழ்வுகளாளும் ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன்.  ஆனாலும் இது போன்ற கடினமான சூழ்நிலைகளிலும் ஒரு தாய் எப்படி தனது வாயையும் வயிற்றையும் கட்டி தன் பிள்ளைகளை காப்பாற்றுவார்கள் .  அதுபோல்தான் ஒரு அரசு தங்கள் தேவைகளை குறைத்துக் கொண்டு மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் . தமிழக மக்கள் இந்த ஆட்சியாளர்களை நிராகரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார்.